Search This Blog

Tuesday, March 6, 2012

கடிகாரம்.....!

ஓடிக்கொண்டே இரு
ஓயாதே
ஓய்ந்து விட்டால்
ஒடமுடியாதவன்
என்று
ஒதுக்கி விடுவார்கள்
ஓரமாய் தூக்கி
எறிந்துவிடுவார்கள்
என்ற பாடத்தை
நொடிக்கொருதரம்
நினவுபடுத்திக்
கொண்டிருக்கிறது
கடிகாரம்.....!

Tuesday, December 13, 2011

கிறிஸ்மஸ் வாழ்த்துகள்.



கிறிஸ்துவ அன்பர்களுக்கு இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்.

Tuesday, March 22, 2011

விழித்திடு






இந்திய வர்க்கத் தோழனே
இழிவை போக்கிட எழுந்திடு பிந்திய இனத்தை முந்தியே போய்விட நீயே விழித்திடு



நிந்தை களைந்து நீயுமே நேர்மை யுடன் உழைத்திடு கந்தை யகற்றி நாளுமே கருணை யுருவாய் நின்றிடு



தரணியில் என்றும் தோழனே தமிழ் மகனாக வாழ்ந்திடு தரமும் உயர தமிழனே திறமை கொண்டு ஏறிடு



முயற்சி இன்றி முடியாது முயல வேண்டும் தளராது அயர்ச்சி என்றும் கூடாது அறிய வெற்றி பெறுதற்கு







Monday, March 15, 2010

துங்கு பைனுன் ஆசிரியர்பயிற்சி கல்லூரி மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்வு

ஒன்று கூடும் நிகழ்வு
கணேஷ் & ஆறுமுகம்

செல்வி, மலர், அன்பரசி,
பிளோர & பிரேமா

Friday, March 12, 2010

வருவது வரட்டும்

வந்த துன்பம்
எதுவானாலும்
வரட்டும் ! வரட்டும் ! வரட்டும்!
வந்து துணிவை
மனதில் நாலும்
தரட்டும்! தரட்டும்! தரட்டும் !

துணிவே நம்மில்
சோம்பல் குணத்தை
விரட்டும்! விரட்டும்! விரட்டும்!
துன்பம் நமக்கு
பாடம் என்றும்
புகட்டும்! புகட்டும் ! புகட்டும்!

செயல்கள் சிறப்புற
செய்தல் வேண்டும்
திட்டம்! திட்டம்! திட்டம்!
வெற்றிக் கனிகள்
அதனால் நமக்கு
கிட்டும்! கிட்டும்! கிட்டும்!

உனக்கு நீயே
போடா வேண்டும்
சட்டம்! சட்டம்! சட்டம்!
உனது புகழோ
ஒருநாள் விண்ணை
முட்டும்! முட்டும்! முட்டும்!

ஆக்கம் : கணேஷ் இராமசாமி

நான் ரசித்த பாடல்

நல்லவர் சொல்லை நாம் கேட்போம் ,

நலமாய் வாழ வழி வகுப்போம்

தலைவர்கள் சொன்ன வழி நடப்போம்

தாய் நாட்டினையே வாழ வைப்போம்.....

புதியவனுக்கு வழிகாட்டுங்கள்


அன்புசால் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள் உரித்தாகுக. இந்த புதிய வலைபதிவின் வாயிலாக அனைத்து தமிழாசிரியர்களையும் இணைக்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும். இது எனது முதல் முயற்சி என்பதால் இதில் பல குறைகள் தென்படலாம். ஆகவே எமது குறைகளை சுட்டி எனக்கு வழிகாட்ட வேண்டியது உங்களின் பொறுப்பாகும். நிற்க.. எனது பதிவுகள் தொடரும்.
அன்னைத் தமிழே...! அன்பின் முகவரி...!