Search This Blog

Tuesday, March 22, 2011

விழித்திடு






இந்திய வர்க்கத் தோழனே
இழிவை போக்கிட எழுந்திடு பிந்திய இனத்தை முந்தியே போய்விட நீயே விழித்திடு



நிந்தை களைந்து நீயுமே நேர்மை யுடன் உழைத்திடு கந்தை யகற்றி நாளுமே கருணை யுருவாய் நின்றிடு



தரணியில் என்றும் தோழனே தமிழ் மகனாக வாழ்ந்திடு தரமும் உயர தமிழனே திறமை கொண்டு ஏறிடு



முயற்சி இன்றி முடியாது முயல வேண்டும் தளராது அயர்ச்சி என்றும் கூடாது அறிய வெற்றி பெறுதற்கு