வந்த துன்பம்
எதுவானாலும்
வரட்டும் ! வரட்டும் ! வரட்டும்!
வந்து துணிவை
மனதில் நாலும்
தரட்டும்! தரட்டும்! தரட்டும் !
துணிவே நம்மில்
சோம்பல் குணத்தை
விரட்டும்! விரட்டும்! விரட்டும்!
துன்பம் நமக்கு
பாடம் என்றும்
புகட்டும்! புகட்டும் ! புகட்டும்!
செயல்கள் சிறப்புற
செய்தல் வேண்டும்
திட்டம்! திட்டம்! திட்டம்!
வெற்றிக் கனிகள்
அதனால் நமக்கு
கிட்டும்! கிட்டும்! கிட்டும்!
உனக்கு நீயே
போடா வேண்டும்
சட்டம்! சட்டம்! சட்டம்!
உனது புகழோ
ஒருநாள் விண்ணை
முட்டும்! முட்டும்! முட்டும்!
ஆக்கம் : கணேஷ் இராமசாமி
Friday, March 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment